இந்தியாவின் முதல் பெண் இமாமாக நியமிக்கப்பட்டார் ஜமீதா .. கேரளாவில் இன்னொரு புரட்சி!
இந்தியாவின் முதல் பெண் இமாமாக ஜமீதா என்ற பெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மலப்புரம்: இஸ்லாமிய மதத்தில் இமாம் என்பது மிகவும் உயரிய பொறுப்பாகும். இந்தியாவில் இதுவரை ஆண்களே இமாமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் முதல் முறையாக கேரளாவில் பெண் இமாம் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜமீதா டீச்சர் என்ற ஜமீதா இமாமாக தேர்வாகி உள்ளார்.
இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மலப்புரத்தில் நடந்த தொழுகையில் கலந்து கொண்டு உள்ளார். இமாமாக அந்த தொழுகையை வழிநடத்தி இருக்கிறார்.

பெண் இமாம்
இவர் கேரளா மாநிலம் மலப்புரத்தில் வசிக்கிறார். அங்கு தினமும் 100 பேருக்கும் அதிகமானோருக்கு குரான் கற்றுக்கொடுத்து வருகிறார். இதன் காரணமாக அங்கு இவர் ஜமீதா டீச்சர் என்று அழைக்கப்பட்டுவருகிறார்

வேறுபாடு கிடையாது
இவர் தான் இமாமாக தேர்வானது குறித்து பேசியுள்ளார். அதில் ''நான் இமாமாக நினைத்த போது என்னை குறித்து பலரும் தவறாக பேசினார்கள். நீ தவறான முடிவு எடுக்கிறாய் என்றார்கள். ஆனால் எனக்கு தெரியும் கடவுளுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. நான் செய்வதில் தவறு இல்லை'' என்று சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல்
இவர் இமாமாக முயன்ற காரணத்தால் கொலை மிரட்டல் கூட வந்து இருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்த போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின்பே இவர் மலப்புரத்தில் குடியேறி குரான் கற்றுக்கொடுத்துள்ளார்.

அமைப்பு
இவருக்கு மலப்புறத்தில் இமாம் ஆக குரான் சுன்னத் அமைப்பு உதவி இருக்கிறது. 2016ல் அங்கு சாதாரணமாக சேர்ந்த அந்த பெண் தற்போது அந்த அமைப்பின் தலைமை செயலாளர் ஆகியுள்ளார். குரானுக்கு எந்த பேதமும் இல்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications