கட்சிகளை தூக்கிப் போடுங்கள் மக்களே.. பாருங்கள் இந்த கேரளப் பெண்களை!
ஒத்தப்பாலம், பாலக்காடு: கேரள மாநிலத்தில் பெண்கள் ஒன்று கூடி 180 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டி அத்தனை பேரையும் அசரடித்துள்ளனர்.
கட்சிகளையும் அரசையும் நம்பி இனியும் பிரயோஜனம் இல்லை என்ற அவல நிலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் கூட இதே கொடுமை நிலைதான்.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவில், பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட ஒத்தப்பாலம் கிராமத்தில் கடும் குடிநீர்ப் பிரச்சினை நிலவுகிறது. இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தனர். அது தாங்களே கிணறு ஒன்றை வெட்டி தண்ணீ்ருக்கு ஏற்பாடு செய்து கொள்வது என்று.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிணறு வெட்டும் வேலையில் பெண்கள் குழுவாக ஈடுபட்டனர். தற்போது 180 அடி ஆழ கிணறு ஒன்றை அவர்கள் வெட்டியுள்ளனர். அதில் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
பாராட்டுக்குரியவர்கள் இந்தப் பெண்கள்.