ரகசிய கேமரா சர்ச்சை.. கேரள ஜவுளி கடைகளில் 'ஆபரேசன் மாண்பு' ரெய்டு நடத்தும் போலீசார்
திருவனந்தபுரம்: ஜவுளிக்கடைகளில் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய கேரளாவில் 'ஆபரேசன் டிக்னிட்டி' என்ற பெயரில் போலீசார் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர்.
கோவாவில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு பிரபல ஜவுளி கடையில் ஆடை வாங்கி உடுத்த சென்றபோது, அங்கு ரகசிய கேமரா இருப்பதை கண்டறிந்து போலீசி்ல் புகார் அளித்தார். இதையடுத்து கடை ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கேரளாவிலும் கடைகளில் அதுபோன்ற கேமராக்களை பொருத்தி வைத்துள்ளனரா என்பதை சோதித்து பார்ப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. துணை கமிஷனர் சக்காரியா ஜார்ஜ் தலைமையில் 4 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் திருவனந்தபுரத்தில், 15 ஜவுளிக்கடைகளில் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெண்கள் பிரிவு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லலிதா கூறுகையில், பதினைந்து கடைகளில் திடீர் சோதனை நடத்திய நிலையில், எந்த கடையிலும், கேமராக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எங்கள் சோதனை தொடரும் என்றார்.
இந்த ரெய்டின் பெயர் ஆபரேசன் டிக்னிட்டி என்பதாகும். தமிழகத்திலும், இதுபோன்ற சோதனைகள் அவசியம் என்பது பெண்மணிகள் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications