ஜனநாயகத்திற்கான முக்கிய போர்... பரபரப்பை கிளப்பிய பிரசாந்த் கிஷோரின் ஒற்றை ட்வீட்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை ஜனநாயகத்திற்கான முக்கிய போர் என்று குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், வங்கத்திற்கு அதன் சொந்த மகளே தேவை என்றும் பதிவிட்டுள்ளார்,
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தமிழகம், புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10,17,22,26 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க தேர்தல் குறித்து பிரபல ஆலோசகரும் ஐபோக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில், "இந்தியாவில் ஜனநாயகத்திற்கான முக்கிய போர்களில் ஒன்று மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது.
வங்காள மக்கள் தங்கள் முடிவுகளுடன் தயாராக இருக்கிறார்கள். சரியான இடத்தில் அவர்கள் தங்கள் முடிவுகளைக் காட்டுவார்கள். வங்காளம் அதன் சொந்த மகளை விரும்புகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், தான் முன்பு பதிவிட்ட ட்வீட்டை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் 21ஆம் தேதி பாஜகவை நேரடியாக எதிர்த்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்திருந்தார். அதில், "என்னதான் ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறினாலும், பாஜகவால் இரட்டை இலக்கு வெற்றியைக் கூட மேற்கு வங்கத்தில் அடைய முடியாது. அப்படி இரட்டை இலக்கை அடைந்துவிட்டால் நான் என் தொழிலைவிட்டு வெளியேறுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்குவதைப் போலவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வழங்கி வருகிறது.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications