ஜும்மா மசூதி தாக்குதலில் தொடர்புள்ள இந்தியன் முஜாகிதின் தீவிரவாதி உ.பியில் கைது!
லக்னோ: இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சகரன்பூரில் தீவிரவாதி ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு படையினர், பாதுகாப்பு படையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அஜாஸ் ஷேக் என்ற இந்தியன் முஜாகிதின் தீவிரவாதி சிக்கியுள்ளார். இவர் புனே நகரை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியன் முஜாகிதின் தீவிரவாத அமைப்பில் இருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு, போலி அடையாள அட்டை மற்றும் சிம் கார்டுகள் மற்றும் பிற அடையாள அட்டைகளை அஜாஸ் ஷேக் தயார் செய்து கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜும்மா மசூதி மீதான தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் பலவற்றிலும் இவருக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications