விவசாயிகளே உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்... ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

மும்பை: உங்களுக்கு துரோகம் செய்பவர்களைக் கொல்லுங்கள் என வன்முறையைத் தூண்டும் விதத்தில் மராட்டிய நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசிய கருத்துக்களால் சர்ச்சை உண்டாகியுள்ளது.

நேற்று மராட்டிய மாநிலம் விதார்பா பகுதி மராட்டிய நவநிர்மாண் கட்சியின் வேட்பாளர் ராஜூ பாட்டீல் ரஜேவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் அக்கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே. அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார்.

மேலும், மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் குறித்து பேசும் போது, ‘விவசாயிகளே, உங்களுகு அநீதி அளிப்பவர்களை கொல்லுங்கள்' என ஆவேசமாகக் கூறினார் ராஜ் தாக்கரே.

Kill those who have done injustice to you, Raj Thackeray tells farmers

மேலும், அவர் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது:-

சாலைகள், குடிநீர் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக கடந்த 67 ஆண்டுகளாக தேர்தலில் போராடி வருகிறோம். ஆனால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து இங்கு உள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்தல் வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மதுபானங்கள் கிடைக்கின்றன. அப்படியிருக்க குடிநீர் மட்டும் எப்படி கொடுக்கப்படமுடியாது' என்றார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசிய ராஜ்தாக்கரே, ‘விவசாயிகளின் தற்கொலைக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம். விவசாயிகளே நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் உங்களுக்கு அநீதி அளித்தவர்களை கொல்லுங்கள்' என இவ்வாறு அவர் பேசினார்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் ராஜ் தாக்கரே பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+