ஆட்சிக்கு வந்தும் ‘ஆம் ஆத்மி’ போராட வேண்டுமா?: கிரண் பேடி
டெல்லி: ஆட்சிக்கு வந்த பிறகும், "ஆம் ஆத்மி' கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும்போது, அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண் பேடி கூறினார்.
ஆம் ஆத்மி தர்ணா குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
" ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன்தான் வாக்களித்தோம் என்று டெல்லி வாக்காளர்கள் கவலை கொள்ளும் வகையில், முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் செயல்பாடு அமைந்துள்ளது.

முதல்வரான பிறகும் அவரால் வீதிக்கு வந்து போராடித்தான் கோரிக்கையை வலியுறுத்த முடிகிறது. இதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. டெல்லி வாக்காளர்களை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிகிறது. முதல்வருக்கான தகுதி, மரியாதை, மதிப்பு ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்துள்ளாரா? என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது.
அவரது நோக்கம் சரியாக இருந்தாலும் அவருடைய பாதை மிகவும் ஆபத்தானது. முதல்வருக்குரிய பொறுப்புடன் கெஜ்ரிவால் நடந்து கொள்ள வேண்டும் என நானும் டெல்லி வாக்காளர்களும் எதிர்பார்க்கிறோம்' என்றார் கிரண் பேடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications