என் டிவிட்டர் அக்கவுண்ட யாரோ ஹேக் செய்து ஜெட்லியை சீண்டிவிட்டார்கள்: பாஜக எம்.பி பல்டி
டெல்லி: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பியான கீர்த்தி பிரசாத், அந்த டிவிட் தன்னுடையதில்லை என கூறி பல்டியடித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரின்டருக்கு தினமும் ரூ.3,000க்கு வாடகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணி செய்ததாக காட்டப்பட்ட 14 நிறுவனங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சிபிஐ தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு பதிலடியாக கெஜ்ரிவால் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜேட்லி.
இதுகுறித்து டிவிட்டரில் பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் கூறிய கருத்து ஒன்று ஜேட்லியை சாடுவதாக இருந்தது. அந்த டிவிட்டரில், ஜேட்லி டிவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்து, அவரை ஆண்மையற்றவர் என்று கீர்த்தியின் டிவிட் சாடியிருந்தது.
My A/C is hacked statement on @arunjaitley as napunsak is not my tweet
— Kirti Azad (@KirtiAzadMP) December 21, 2015 இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அக்கட்சி அறிவித்தது. இதனால் அதி்ச்சியடைந்த கீர்த்தி பிரசாத், தனது டிவிட்டர் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து அவ்வாறு டிவிட் போட்டுவிட்டதாக டிவிட்டர் மூலம் கருத்து தெரவித்துள்ளார்.
அதேநேரம், ஹேக் செய்யப்பட்ட டிவிட்டரை எப்படி அவர் திரும்ப சரி செய்தார் என்ற விவரம் இல்லை. சஸ்பெண்ட் நடவடிக்கையால் அச்சமடைந்து, அவர் பல்டியடித்திருக்க கூடும் என்று தெரிகிறது.
ஏனெனில், நாடாளுமன்றத்தில், இதுகுறித்த விவாதம் வரும்போது, கீர்த்தி ஆசாத், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) அமைத்து காலவரையறை நிர்ணயித்து இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஜேட்லிக்கும் அவருக்குமான மோதலின் ஒருபகுதியாகவே இந்த டிவிட் வெளியிடப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications