முத்த போராட்டத்திற்கு பெங்களூரு போலீசார் அனுமதி மறுப்பு! போராட்டக்காரர்கள் ஏமாற்றம்
பெங்களூரு: போலீசார் அனுமதி மறுத்ததால் பெங்களூருவில் இன்று நடைபெறுவதாக இருந்த முத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடங்கி வடமாநிலங்கள் வரை பரவி வரும் முத்த பிரசாரம் இன்று பெங்களூருவில் நடப்பதாக இருந்தது.

ஆனால் பொது இடத்தில் இது ஒழுக்கமற்ற செயலாக அமையும் என்று கூறி வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டம்-ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்த பெங்களூரு போலீசார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தனர். எனவே இந்த நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், முத்த பிரசாரத்தை அவர்கள் ஒத்தி வைப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தனர்.
இது குறித்து பேஸ்புக்கில் இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறியுள்ளதாவது: முத்த பிரசாரத்தின் மீது போலீசார் தெரிவித்துள்ள கவலைகள் தொடர்பாக அவர்களுக்கு விரிவான பதிலை அனுப்பி இருக்கிறோம். அதில் காதல் முத்த பிரசாரத்தை நடத்துவதன் நோக்கம் குறித்தும் விளக்கி எழுதி இருக்கிறோம். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. போலீசார் அளிக்கும் பதிலின் அடிப்படையில் காதல் முத்த போராட்டம் பின்னர் நடத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications