கேரளாவில் காவல்நிலையத்துக்குள் "முத்தப் போராட்டம்"! சிவசேனா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
ஆழப்புழா: கேரளாவில் ஆலப்புழா கடற்கரையில் முத்தப் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் காவல்நிலையத்துக்குள்ளே அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போராட்டத்ம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அநாகரீக செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சில சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக் ஆர்வலர்கள் கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நாடெங்கிலும் இதைப்போன்ற முத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு அமைப்பு கடற்கரையில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து ஆலப்புழா கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவித்தபடி முத்தப் போராட்டம் நடத்த வந்த 41 பேரை போலீசார் தடுத்து காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதேபோல் இந்த முத்தப் போராடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவசேனா அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே காவல்நிலையத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து முத்தப் போராட்டம் நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications