மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்கும் கேரளா இளம் பெண்

ஷோபியாவினால் பேசவோ, கேட்கவோ இயலாது. ஆனால் பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில், வரும் 17ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகிப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சிறுவயது முதலே
ஷோபியாவின் தந்தை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். தாயார் பள்ளி ஆசிரியை. பத்து மாத குழந்தையாக இருந்த போதுதான் ஷோபியாவின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்ததை பெற்றோர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமுதல் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து திறமைமிக்க குழந்தையாக ஷோபியாவை வளர்த்து வந்துள்ளனர்.
பன்முகத்திறமை
ஷோபியா தற்போது இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு,ஓவியம், ஆடை வடிவமைப்பு, மாடலிங் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஆவர்.
கார் பந்தைய வீராங்கனை
நடனத்திலும் அதிக ஆர்வம் கொண்ட ஷோபியா, கார் பந்தையத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் கார்பந்தைய வீராங்கனை ஆகவேண்டும் என்பது இவருடைய எதிர்கால கனவாகும்.
இந்திய அழகிப் போட்டி
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய அழகி போட்டியில், ஷோபியா இரண்டாம் பரிசை வென்றார்.
உலக அழகிப் போட்டி
இந்த நிலையில் செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில், வரும் 17ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications