கொச்சு வெடிகள்: ஃபேஸ்புக் பக்கம் மூலம் சிறுமிகளை வைத்து விபச்சாரம்
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் தொடர்பான ஃபேஸ்புக் பக்கமான கொச்சு சுந்தரிகள் பற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தியபோது கொச்சு வெடிகள் என்ற பெயரில் மேலும் ஒரு பக்கம் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். விபச்சாரத்திற்காக கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பக்கம் துவங்கி சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவரும் கைது செய்யப்பட்டார்.
அவர் தான் ராகுல், ரஷ்மிக்கு பெண்கள், சிறுமிகளை அனுப்பி வைத்து வந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபச்சாரத்திற்காக கொச்சு வெடிகள் என்ற பெயரில் மற்றொரு ஃபேஸ்புக் பக்கம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொச்சு வெடிகள் பக்கத்தில் சிறுமிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களை பார்த்து பலர் அசிங்கமாக கமெண்ட் போட்டுள்ளனர். இந்த பக்கத்தை யார் துவங்கி சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்ய ஃபேஸ்புக்கில் பக்கங்கள் துவங்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.