அனுஷ்காவுக்காக தான் கோஹ்லி 'இப்படி' செய்கிறாராம்!
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாததால் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் காதலை புதுப்பித்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் பழையபடி ஜோடி போட்டு உணவகங்களுக்கு செல்கிறார்கள். காதலை புதுப்பித்த விஷயத்தை ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரிவிக்காமல் தங்களோடு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம் கோஹ்லியும், அனுஷ்காவும்.
இந்நிலையில் கோஹ்லி பத்திரிகையாளர்களை சந்திப்பதை முடிந்த வரையில் தவிர்த்து வருகிறார். எங்கே பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனுஷ்கா பற்றி கேட்டுவிடுவார்களோ என்று நினைத்து தான் இப்படி செய்கிறாராம் கோஹ்லி.
அனுஷ்கா தற்போது சுல்தான் படப்பிடிப்பில் புடபெஸ்ட்டில் உள்ளார். முன்னதாக அவரை வழியனுப்பி வைக்க மும்பை விமான நிலையத்திற்கு வந்த கோஹ்லி அனுஷ்காவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications