இரவு நேர விளையாட்டில் கோஹ்லி பிசி, அப்புறம் பகலில் எப்படி: நடிகரின் கீழ்த்தரமான ட்வீட்
மும்பை: விராட் பாய், நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். நீங்கள் இரவு நேரத்தில் பிசியாக விளையாடும்போது பகலில் ஏன் விளையாட வேண்டும் என்று இந்தி நடிகர் கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நானும் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறேன், நான் மிகவும் பிரபலமாக்கும் என்று கூறிக் கொண்டு திரிபவர் கமால் ஆர் கான். ஷாருக்கான் தனது பெயரை எஸ்ஆர்கே என்று பயன்படுத்துவதால் அவருக்கு போட்டியாக கமால் தனது பெயரை கேஆர்கே என்று வைத்துக் கொண்டுள்ளார்.
அவ்வப்போது யாரையாவது திட்டி அல்லது வம்புக்கு இழுத்து ட்வீட் போடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார் கேஆர்கே. ஓட்டவாய் என்று பாலிவுட்காரர்கள் திட்டும் கேஆர்கே உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த பிறகு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அனுஷ்கா
இந்தியா தோல்வி அடைய முக்கிய காரணமான அனுஷ்கா சர்மாவின் வீட்டில் கல்லெறியுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

தேசதுரோகி
அனுஷ்கா சர்மாவின் படங்களை புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். அவரது படங்களை பார்ப்பவர்கள் தான் உண்மையான தேச துரோகி.

கோஹ்லி
இன்று விராட் கோஹ்லி தன்னுடைய கௌரவத்தை மட்டும் அல்ல அனுஷ்கா சர்மாவின் கௌரவத்தையும் காக்க வேண்டி உள்ளது.

கிரிக்கெட்
விராட் பாய், நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். நீங்கள் இரவு நேரத்தில் பிசியாக விளையாடும்போது பகலில் ஏன் விளையாட வேண்டும் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.

கீழ்த்தரம்
இப்படி கீழ்த்தரமாக ட்வீட்கள் போடுவதால் தான் கேஆர்கே மீது பாலிவுட்காரர்கள் கொலவெறியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications