கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மிகப் பழமையான, புகழ்பெற்ற சுரேந்திரநாத் கல்லூரியின் மாணவர் சங்க அறையை நீண்ட நாட்களுக்குப் பிறகு திறந்து பார்த்த கல்லூரி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்குக் கறையான்கள் அரித்த நிலையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், இரண்டு சொகுசு பெட் ரூம்கள், ஆணுறை பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் மற்றும் துப்பாக்கி இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அரண்டு போனார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் கல்லூரிகளில் மாணவர் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாகக் கடந்த 2025ல் கலேஜ் மாணவர் யூனியன் ரூம்களை மூட கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, கல்லூரிகளில் உள்ள மாணவர் சங்க அறைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தென் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் யூனியன் அறைக்குள் 24 வயது மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரத்தைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Kolkata Surendranath College Raid Kolkata

அதிர்ச்சி

இந்த நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு, அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள மாணவர் சங்க நிதியை தணிக்கை செய்ய உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக, சுரேந்திரநாத் கல்லூரியில் கடந்த ஒரு வருடமாகப் பூட்டிக்கிடந்த மாணவர் சங்க அறையைத் திறந்து நேற்று தூய்மைப் பணி மேற்கொண்டனர். அப்போது தான் அந்த அறையின் ரகசியக் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கத் தொடங்கின.

ஒரு கோடி ரூபாய்

அறையில் இருந்த ஒரு பழைய மர அலமாரியைத் திறந்து பார்த்தபோது, அங்கு இரண்டு பெரிய பெட்டிகள் இருந்தன. அதைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. உள்ளே 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருந்தன. இதன் மொத்த மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்ததால் அந்தப் பணத்தின் பெரும்பகுதியைக் கறையான்கள் அரித்துச் சிதைத்திருந்தன. இதுமட்டுமல்லாமல், அந்த அறைக்குள் கறுப்பு கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு கைத்துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது. உடனே போலீசார் வரவழைக்கப்பட்டு அந்தத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய அறை

பணம் மற்றும் துப்பாக்கி சிக்கியதைத் தொடர்ந்து கல்லூரி வளாகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கல்லூரி மொட்டை மாடியில் இரண்டு சொகுசு ஏசி பெட் ரூம்கள், விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் தலையணைகளுடன் ரகசியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைகளைத் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியப் புள்ளியான தேபாஷிஸ் பந்தோபாத்யாய மற்றும் அவரது மகன் ஷிபாஷிஸ் ஆகியோர் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தி வந்ததாகக் கல்லூரி ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தங்களை அந்த அரசியல் தலைவர்களுக்கு மசாஜ் செய்து விடச் சொல்லி மிரட்டியதாகவும் ஊழியர்கள் கதறியுள்ளனர்.

ஆணுறை

மேலும், கல்லூரியின் மொட்டை மாடியில் குவியல் குவியலாக மது பாட்டில்களும், மாணவர்களின் அறையில் இருந்து ஏகப்பட்ட ஆணுறை பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு, பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளன.

இந்த விவகாரம் வெடித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பாஜக எம்எல்ஏ சஜல் கோஷ், இந்த ஒரு கோடி ரூபாய் பணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மாணவர்களிடம் வசூலிக்கப்படும் யூனியன் ஃபீஸ் வெறும் 50 முதல் 100 ரூபாய் மட்டும்தான். அதை வைத்து ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க முடியாது. தகுதியான ஏழை மாணவர்களின் சேர்க்கையைப் பறித்துவிட்டு, லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு சீட் விற்கும் மோசடி நடந்துள்ளது. இந்த ஊழல் பணம் அனைத்தும் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குச் சென்றுள்ளது" என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+