மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் வானவேடிக்கை நடத்திய கோவில் நிர்வாகம்
கொல்லம்: கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் அதை மீறி பட்டாசுகள் வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை 1 மணி முதல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. காலை 3.30 மணிக்கு பட்டாசு வெடிக்கையில் தீப்பொறி பறந்து சென்று பட்டாசு பொட்டலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் கோவில் வளாகத்தில் தீப் பிடித்து எரிந்தது அங்கிருந்த பக்தர்களில் 107 பேர் உடல் கருகி பலியாகினர், 350 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் 4 ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications