கூடங்குளத்தில் பிப்ரவரிக்குள் முழு மின் உற்பத்தி: நா.சா.
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது அணு உலையில் தற்போது 440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இது 750 மெகாவாட்டாகவும், அதன் பிறகு அதிகபட்சமாக 1,000 மெகா வாட் வரையிலும் அடுத்த மாத இறுதிக்குள் உயர்த்தப்படும். அணு உலையின் மின் உற்பத்தித் திறனை 750 மெகா வாட்டாக உயர்த்துவதற்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் ஏற்கெனவே அனுமதி கேட்டு அதன் அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான அனுமதி எந்த நேரத்திலும் கிடைக்கவுள்ளது. 2வது அணு உலையில் மின் உற்பத்தியைத் தொடங்கும் பணிகள் 95% நிறைவடைந்துள்ளன.
எனவே, இந்த அணு உலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்க முடியும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications