கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ்... மகளிர் ஆணையம் சம்மன்!
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் மகளிர் அணி தொண்டருடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி மகளிர் ஆணையம் குமார் விஸ்வாஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது பிரசாரப் பணியாற்ற வந்த பெண் தொண்டர் ஒருவருடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அஜய் வஹ்ரா என்பவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் இந்த விவகாரம் குமார் விஸ்வாஸின் மனைவிக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை குமார் விஸ்வாஸ் மறுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணார்ச்சி காரணமாக தன் மீது இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவருக்குப் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருப்பதாகவும் விஸ்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அஜய் வஹ்ரா.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி குமார் விஸ்வாஸுக்கு டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, உட்கட்சி மோதல்களால் சிதறு போயுள்ள ஆம் ஆத்மி கட்சியில் இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications