For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்குக்கு இறுதிச் சடங்கு செய்து நெகிழ வைத்த கிராம மக்கள்...!- வீடியோ

ஆந்திர மாநிலம் குப்பம் கிராமத்தில் சாலை விபத்தில் அடிபட்டு இறந்த குரங்குக்கு மனிதர்களுக்கு செய்வதுபோல் இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது.

By Suganthi
Google Oneindia Tamil News

அமராவதி: சாலையில் அடிபட்டு இறந்த குரங்குக்கு, குப்பம் கிராம மக்கள் இறுதிசடங்கு நடத்தி குரங்கை அடக்கம் செய்த நிகழ்வு நெகிழச் செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளது குப்பம் கிராமம். இங்கு சில தினங்களுக்கு முன்பு குரங்கு ஒன்று சாலை விபத்தில் அடிபட்டு, பலத்த காயமடைந்தது. உடனே அந்தக் குரங்கை மீட்டு, மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.

Kuppam village in Andra pradesh people done funeral for a monkey

கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இரண்டு நாட்களாக குரங்குக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்துவிட்டது. குரங்கின் மேல் பாசம் வைத்த குப்பம் கிராம மக்கள் அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல் இறுதிச் சடங்கு செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி பாடைகட்டி, மாலை போட்டு பறை ஒலிக்க ஆட்டம் ஆடி ஊர்வலமாக எடுத்துச் சென்று புதைத்தனர். இந்த நிகழ்வு பார்ப்பவரை நெகிழச் செய்தது.

English summary
In Andra pradesh a monkey died in road accident and Kuppam village people done funeral for that monkey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X