For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு வந்தால் முதல் வேட்டு “ஆர்எஸ்எஸ் – பாஜக” வுக்குதான் - சொல்கிறார் லாலு

|

பாட்னா: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவை தடை செய்துவிடுவோம் " என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் "ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா போன்ற அமைப்புகளை தடை செய்துவிடுவோம்.

Lallu says his dream about victory…

இதுபோன்ற அமைப்புகள் வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. மேலும், வன்முறையாளர்களை நாட்டை விட்டே துரத்துவோம்" என்று கூறினார்.

மேலும் அவர், "கிரிராஜ் சிங் அனைவருக்கும் தலைவர் இல்லை. இந்தியாவில் வகுப்புவாதம் மற்றும் பாசிச பிரச்சாரம் செய்துவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி அணிந்த உருவம்தான்.

இது போன்ற அமைப்பு இந்தியாவில் அதிகாரத்திற்கு வருவதை கடவுள்தான் தடுக்கவேண்டும். அவர்கள் மொத்த இந்தியா முழுவதும் தீயை வைத்து விடுவார்கள். இது இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை முழுவதும் விழுங்கிவிடும். இந்தியா அழிந்துவிடும்" என்றும் கூறியுள்ளார்.

English summary
Lallu Prasad yadav says if they came to lead the country, they will destroy the RSS and BJP parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X