"மோதி மோதி மோதி"... மோடியை லாலு எப்படிக் கிண்டலடிக்கிறார் பாருங்கள்!
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் ஒரு போதும் சீரியஸ் அரசியல்வாதியாக இருந்ததில்லை. சீரியஸான விஷயத்தையும் கூட ஜாலியாக கையாளுவார். இப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் வாரியுள்ளார்.
சமீபத்தில் பாட்னாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை அறிவித்தார். இதைத்தான் கிண்டலடித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
Lalu Prasad Yadav mimics PM Narendra Modi while giving a speech in Patna pic.twitter.com/GjtUH1Ey3y
— ANI (@ANI_news) August 19, 2015
இதுகுறித்து கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில் மோடியின் பேச்சையும், அவரது அறிவிப்பையும், அவருக்கு ஆதரவாக பாஜகவின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போடும் கோஷத்தையும் கிண்டலடித்துப் பேசினார் லாலு.
பீகார் மாநிலத்திற்கு நிதியுதவி அளித்ததைக் குறிப்பிட்ட லாலு, மோடி பேசியதைப் போல பேசி கிண்டலடித்தார். அத்தோடு நில்லாத அவர் அவர் எதைச் சொன்னாலும் கூடவே மோதி மோதி மோதி என்று இந்த வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கோஷம் போடுகிறார்கள் என்று கிண்டலடிக்கவே கூட்டம் ஆர்ப்பரித்துச் சிரித்தது.
சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் லாலு பேசுகையில், நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு பெரும் இழுக்காக மாறியுள்ளார். அவரைப் பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் பீகார் தேர்தல் மண்டல் ராஜ் 2 மற்றும் ஜங்கிள் ராஜ் 2க்கு இடையிலான போராகும். இதில் மண்டல் ராஜ் 2 தான் வெல்லும். காட்டாட்சி விரட்டப்படும் என்று கூறினார் லாலு.