லாலுபிரசாத் யாதவ் உடல்நிலை பாதிப்பு : டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை
கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவ் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் கொண்டு செல்லப்படுகிறார்.
ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் அங்குள்ள ராஜேந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோதே லாலுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகே அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயர்தர மேல்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால், லாலு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக மருத்துவமனையான எய்ம்ஸில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜேந்திர மருத்துவக்கல்லூரியின் இயக்குநர் கூறுகையில், லாலுபிரசாத் யாதவ் ஏற்கனவே இருதயக் கோளாறு, நீரிழிவு நோய், மூல நோய், சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு நிச்சயம் மேல்சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications