கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு.. லாலு பிரசாத் சிறையில் அடைப்பு!
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

போலி பில்கள்
பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலி பில்கள்
பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒருவர் அப்ரூவராக மாறினார்
இதில் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட, 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்டனர். ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
|
லாலு குற்றவாளி
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்றும், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத்மிஸ்ரா விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
|
பிஸ்ரா முண்டா சிறை
தீர்ப்பு விவரம் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லாலு தற்போது சிறையில் அடைக்கப்பட உள்ளார். அவர் பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications