எச்சூஸ்மி.. டோண்ட் டிஸ்டர்ப் சுஷ்மா.. இது லாலு!
பாட்னா: மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒரு பெண். அவரை அரசியல்வாதிகள் தொந்தரவு செய்யக் கூடாது. இத்தோடு விட்டு விடுங்கள் என்று சுஷ்மாவுக்குப் பரிந்து பேசியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
தலைமறைவுக் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் சுஷ்மா சுவராஜ். அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஆனால் பாஜக இதற்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

காங்கிரஸார் தேவையில்லாமல் இதைப் பெரிதுபடுத்துவதாக பாஜக கூறுகிறது. வழக்கம் போல பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சுஷ்மாவுக்கு ஆதரவாக லாலு பேசியுள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மா ஒரு பெண். இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடலாம். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். மேலும் மேலும் தொந்தரவு செய்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் லாலு.












Click it and Unblock the Notifications