பீகார்: சட்டசபை தேர்தலில் லாலுவின் 2 மகன்கள் "குடும்ப தொகுதிகளில்" போட்டி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 2 மகன்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இதில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் எஞ்சிய 41 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணியின் அனைத்து கட்சி வேட்பாளர் பட்டியலும் இன்று பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த சந்திப்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் சவுத்ரி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ராம்சந்தர் பூர்வே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்பாளர் பட்டியலில் வைஷாலி மாவட்டத்தின் 2 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், பிரதாப் யாதவ் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரஹ்கோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 1995,2000ஆம் ஆண்டுகளில் லாலுவும், 2005 பிப்ர்வரி, 2005 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவியும் வெற்றி பெற்றிருந்தனர். இது லாலுவின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது.

லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார். அவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். இத்தொகுதியில் 2010ஆம் ஆண்டு ராப்ரி தேவியை தோற்கடித்தவர் சதீஷ் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications