மோடி ஒரு அரசியல் ராவணன்: சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி அரசியல் ராவணன் என்றும் பீகார் தேர்தலில் அவரது முடிவு தெரிய வரும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.

Lalu Prasad Yadav

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மோடி ஒரு அரசியல் ராவணன். விஜயதசமி அன்று எப்படி மக்கள் ராவணனை கொல்வார்களோ அதே போன்று பீகார் மக்கள் அரசியல் ராவணனை வதம் செய்வார்கள். பீகார் தேர்தலில் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை தான் அவ்வாறு கூறினேன் என்றார்.

பீகாரில் காட்டாட்சியை ஊக்குவித்தவர்களின் விதியை மக்கள் நிர்ணயிப்பார்கள் என மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் தேவையில்லாத பேச்சு பேசி வருவதாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஸ்வாஹா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+