லாலு பிரசாத் யாதவுக்கு இதய அறுவை சிகிச்சை தேவை: டாக்டர்கள்
மும்பை: மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனையின் மெடிக்கல் டைரக்டரான மருத்துவர் விஜய் டிசில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுவாக லாலுஜி ஆரோக்கியமான மனிதர். அவர் தீவிர பிரச்சாரம் செய்ததில் இருந்தே அது தெரிகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் சிலவற்றின் முடிவு வர வேண்டி இருக்கிறது. அது வந்த பிறகே அவருக்கு எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்று தெரிய வரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடந்த இடைத்தேர்தலையொட்டி லாலு தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் சாலை வழியாக செல்வதை தவிர்த்து பெரும்பாலும் ஹெலிகாப்டரில் தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications