திரிபுராவில் நிலச்சரிவு: பாறைகளுக்கு அடியில் சிக்கி தாய்- 2 குழந்தைகள் பலி
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாயும், இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
திரிபுராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தெற்கு திரிபுரா பகுதியில் நிட்டிரோஸாபரா என்ற மலையடிவார கிராமம் ஒன்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு இந்த கிராமத்தில் உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ஜமாதன் திரிபுரா(32) என்பவர் மலைப்பாறைகள் சரிந்து விழும் சத்தம் கேட்டு கண்விழித்தார்.
தூக்கத்தில் இருந்த மனைவி, பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினார்.
ஆனால் மளமளவென்று சரிந்து, உருண்டு வந்த பாறை குவியல்களுக்கு அடியில் சிக்கி ஜமாதனின் மனைவி சிடமாலா, அவரது 4 வயது மகன் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications