நிலச்சரிவு.. சீன எல்லையில் போட்ட ரோடுகள் அடித்துச் செல்லப்பட்டன! அருணாச்சலப் பிரதேசத்தில் பாதிப்பு
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச - சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 33 அடித்து செல்லப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளில் தீவிரமாக வருகின்றன. நிலச்சரிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு கூறுகையில், "ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை பராமரிக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை. அதேபோல உயிரிழப்பு, எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பது குறித்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.













Click it and Unblock the Notifications