கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ- அணைக்கும் பணியில் வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் 7வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சுமார் 20 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 7வது மாடியில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இன்று காலை 10.30 மணியளவில் நேரிட்ட இந்த தீ விபத்தில், ஏராளமான அரசு ஆவணங்கள் தீக்கிரையாகின.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. கட்டடத்துக்குள் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications