பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் வாரணாசி வீட்டில் இருந்து திருட்டு
Subscribe to Oneindia Tamil

பீகாரில் பிறந்த பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது 93வது வயதில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இருக்கும் அவரது வீட்டில் கடந்த 2006ம் ஆண்டு மரணம் அடைந்தார். இசைத் துறையில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது.
ஷெனாயை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை உஸ்தாத் பிஸ்மில்லா கானையே சேரும். அவர் பயன்படுத்திய ஷெனாய் கருவி அவரது வாரணாசி வீட்டில் இருந்து திருடு போயுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் திருடர்களை தேடி வருகிறார்கள்.
முன்னதாக உஸ்தாத் அம்ஜத் அலி கான் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வருகையில் அவரது சரோட் இசைக் கருவி காணாமல் போனது. பின்னர் அதை விமான நிறுவனமே கண்டுபிடித்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications