பணியிடங்களில் பாலியல் தொல்லை பெண்களுக்கு அதிகரிப்பு: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பான கேள்விக்கு, பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவித்த பதிலில், கிருஷ்ணா தீரத் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 3 வருடங்களில் பெண்கள் தங்கள் வேலைபார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லைகள் அதிகம் நடப்பதாக புகார்கள் அதிகரித்து உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
விஷாகா தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டிய வழிமுறைகளை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கேட்டு கொண்டு உள்ளது.
மேலும் ஆணையம் நாட்டில் ஓவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க குழு அமைக்க கேட்டுக் கொண்டு உள்ளது. மேலும் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மூலம் அடிக்கடி தகவல்கள் வெளியிடப்படும்'' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications