வெளியே அனுப்பப்பட்ட அனில் கோஸ்வாமி- புதிய உள்துறை செயலராக எல்.சி. கோயல் நியமனம்!
டெல்லி: நாட்டின் புதிய உள்துறை செயலாளராக ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த எல்.சி. கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி நேற்று இரவு நீக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு எல்.சி. கோயலை அந்த இடத்துக்கு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. கைது செய்வதை உள்துறை செயலாளராக இருந்த அனில் கோஸ்வாமி தடுத்தார் என்பது புகார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணை நடத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை செயலர் பொறுப்பிலிருந்து, அனில் கோஸ்வாமி நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஊரக வளர்ச்சித் துறையில் செயலராக இருந்த எல்.சி. கோயல் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1979ம் ஆண்டு கேரளா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோயல். 2002ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராகவும் பணியாற்றியவர் கோயல்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications