லெனின், பெரியார் சிலை விவகாரங்களால் மோடி அதிருப்தி! ராஜ்நாத்சிங்குடன் தொலைபேசியில் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கொல்கத்தாவில் மேலும் ஒரு சிலை உடைப்பு..மோடியின் முடிவு- வீடியோ
டெல்லி: புரட்சியாளர் லெனின், தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
திரிபுராவில் பாஜகவினரால் லெனின் சிலை அகற்றப்பட்டது. அந்த பரபரப்பு ஓயும் முன்பாக, நேற்று இரவு தமிழகத்தின் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவங்களால் அதிருப்தியடைந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சிலைகள் அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, சிலை உடைப்பு போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications