லஷ்கர் தீவிரவாத அமைப்பின் தலைவர் காஷ்மீரில் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் பகுதிக்கான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் பாதுகாப்பு படை வீரர்களால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முல்தான் பகுதியை சேர்ந்தவர் முகமது நவீத் ஜாத் என்ற அபு ஹன்சல்லா. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தெற்கு காஷ்மீர் மாவட்ட தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர். இவர், காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்கம் மாவட்டத்தின், பேபாக் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவம் மற்றும் மாநில காவல் துறை இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் அபு ஹன்சல்லா சிக்கினார். இவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, 2 மாகசின்கள், 60 ரவுண்ட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications