"ஆனா இது புதுசா இருக்குண்ணே".. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடிபம்பை அடித்தால் தண்ணீருக்கு பதிலாக சாராயம் கொட்டுவதை பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த நூதன ஐடியாவை கொண்டு கள்ளச்சாராயம் விற்று வந்த கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், இதுபோல வேறு எங்கெல்லாம் சாராய அடிபம்பை கள்ளச்சாராய கும்பல் நிறுவியிருக்கிறது என்பது குறித்த விசாரணயைில் போலீஸார் இறங்கி இருக்கின்றனர்.

நாட்டில் மதுபானங்களால் ஏற்படும் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, கள்ளச்சாராயத்தால் மறுபுறம் பெரிய களேபரங்களும், அவலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. மதுபானங்களை ஒப்பிடும் போது, மலிவான விலையில் கிடைப்பதாலும், போதை அதிகமாக இருப்பதாலும் கிராமப்புறங்களில் கள்ளச்சாராயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி, சில கும்பல் கண்ட கண்ட ரசாயனங்களை பயன்படுத்தி சாராயம் காய்ச்சுகின்றனர். இதுபோன்ற மோசமான கள்ளச்சாராயத்தை குடித்து ஏராளமானோர் பலியாகி உள்ளனர். பலருக்கு கண் பார்வையும் பறிபோயுள்ளது.

இதனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல மாநில அரசாங்கங்களும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் சில கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார் குனா மாவட்டத்தில் உள்ள சான்சோடா மற்றும் ரகோகர் கிராமங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த கிராமங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால் எங்கும் கள்ளச்சாராய பீப்பாய்களையோ அல்லது பானைகளையோ போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்த ஒரு அடிபம்பை தண்ணீர் குடித்த போலீஸார், அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், அந்த அடிபம்பில் இருந்து தண்ணீர் வரவில்லை. சாராயம் வந்திருக்கிறது.
இதையடுத்து, அந்த அடிபம்பை எடுத்து பூமியை தோண்டி பார்த்த போது, சுமார் 7 அடி ஆழத்தில் பெரிய அளவிலான ராட்சத டேங்குகளில் கள்ளச்சாராயம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த டேங்குகளை வெளியே எடுத்த போலீஸார், அதிலிருந்த கள்ளச்சாராயத்தை கீழே கொட்டினர். விசாரணையில், கள்ளச்சாராய கும்பல் இந்த அடிபம்பில் சாராயத்தை எடுத்து பாலித்தீன் கவரில் வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications