ஒக்கே ஒக்க போன்... குவார்ட்டர் வீடு தேடி வரும் - இனி ஆந்திராவில் மதுவுக்கும் ஹோம் டெலிவரி!
ஹைதராபாத்: ஆந்திராவில் இனி ஒரு போன் கால் போட்டால் போதுமாம்... பீட்ஸா, பிரியாணி போல மதுவும் இனி ஹோம் டெலிவரி செய்யப்படும் என்ற பொன்னான செய்தி குடிமகன்கள் காதில் தேனாக பாய்ந்துள்ளது. கால் கூட வேண்டாம் ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலே வீடு தேடி வருமாம் "லிக்கர்".
சுங்கவரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் கடைகள் காலி செய்யப்பட்டதனை தொடர்ந்து மதுவை வீடுகளேக்கே சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா போன்ற டவுன் பகுதிகளில் உள்ள மால்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில கலால் அதிகாரி சீனிவாஸ் ஸ்ரீநரேஷ், "கிட்டதட்ட 5 மால்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கிநாடா, குண்டூர் ஆகிய இடங்களில் இந்த வசதி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வசதியை அமல்படுத்த ஒவ்வொரு மாலும், 10,000 சதுர அடியில் அமைந்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி 436 மதுக்கடைகளின் மூலம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications