திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு
Recommended Video
போபால்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் உயிருடன் ஜீவசமாதி அடைவேன் என பிரகடனம் செய்த அகோரிபாபா பைரக்யானந்த் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் திக்விஜய்சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலேகான் குண்டுவெடிப்பில் சிறைவாசம் அனுபவித்த சாத்வி பிரக்யாசிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.

ஆனால் ராமர் கோவிலை கட்டாததால் அதிருப்தி அடைந்த அகோரி பாபாக்கள் உள்ளிட்ட 7,000 சாமியார்கள் திக்விஜய்சிங்கை ஆதரித்தனர். திக்விஜய்சிங் வெல்ல வேண்டும் என்பதற்காக யாகங்களை நடத்தினர்.
இதில் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பஞ்சயதி நிரஞ்சனி அகாடாவை சேர்ந்த மகாமண்டலேஸ்வரர் சுவாமி பைரக்யானந்த் என்பவர், திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் ஜீவசமாதி அடைவேன் என அறிவித்தார்.
மேலும் திக்விஜய்சிங் வெல்வதற்காக நாள்தோறும் 5 கிலோ காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு யாகமும் வளர்த்து வந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பிரக்யாசிங்கிடம் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பைரக்யானந்த் தலைமறைவாகிவிட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஜீவசமாதி அடைந்துவிட்டாரா? என மத்திய பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications