மிசோரமில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு? பாஜக வாஷ் அவுட்- பரபர புது சர்வே!
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என ஒரே வாரத்தில் 2-வது தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமையக் கூடும் என்பதையே இக்கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பாஜக ஆகியவை களத்தில் உள்ளன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது மிசோரமில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. மிசோரமில் வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.

2018-ல் மிசோரம் முடிவுகள்: 2018-ம் ஆண்டு மிசோரம் சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26; காங்கிரஸ் 5; ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களில் வென்றது. பாஜக ஒரு இடத்தில் வென்றது. மிசோ தேசிய முன்னணியுடன் கூட்டணி ஆட்சியில் இணைந்ததால் பாஜக ஆளும் மாநிலங்கள் பட்டியலில் மிசோரமும் இணைந்தது.
தொங்கு சட்டசபை: மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அண்மையில் Small Box India ஒரு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவித்திருந்தது. அந்த கருத்து கணிப்பில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 12-14 இடங்கள்; காங்கிரஸ் 11-13 இடங்கள்; ஜோரம் மக்கள் இயக்கம் 9-11 இடங்கள் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை எந்த ஒரு கட்சியும் பெறாமல் தொங்கு சட்டசபையே அமையும் என்றது அக்கருத்து கணிப்பு.
Lok Poll கருத்து கணிப்பு: தற்போது Lok Poll, மிசோரம் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 21,250 பேரிடம் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Lok Poll கருத்து கணிப்பு முடிவுகளின் படி ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை தலா 12 முதல் 14 இடங்களிலும் காங்கிரஸ் 10 முதல் 12 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசு?: மணிப்பூர் விவகாரத்தில் பாஜக மீது ஆளும் மிசோ தேசிய முன்னணி கடும் அதிருப்தியில் உள்ளது. மிசோரம் மக்களும் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குக்கி இன மக்களு தொப்புள் கொடி கொண்ட ஒரே இனத்தவர்; மணிப்பூர் வன்முறையை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பதால் மிசோரமில் பாஜக மீது கடும் கோபம் நிலவுகிறது. மிசோரம் மாநிலத்தில் பாஜகவுக்கு அதிகபட்சம் 1 இடம் கிடைக்கக் கூடும் என்பதுதான் இதுவரையிலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இதனால் மிசோ தேசிய முன்னணி அல்லது ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த தேர்தலில் வெறும் 5 இடங்களைப் பெற்று ஓரம்கட்டப்பட்ட காங்கிரஸ் இம்முறை இரு மடங்கு இடங்களை வெல்லும் என்பது கருத்து கணிப்புகள் பொதுவாக தெரிவித்து வரும் முடிவுகளாகும்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications