For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தல் தேதி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
15வது லோக்சபா முடிவடைவதையொட்டி விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இதனால் லோக்சபா தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் நாளை லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
காலை 10.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
The Election Commission is likely to announce the Lok Sabha election dates at 10:30 am on Wednesday. Polling in the upcoming elections is likely to commence in the second week of April and may be spread over seven phases, the longest so far, highly placed sources said.