உ.பியின் 80, பீகாரின் 40 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள்தான் இருக்கின்றன. ஆனால் இம்மாநிலத்தில் 6 கட்டமாக லோக்சபா தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைப் போல பீகாரிலும் 40 தொகுதிகள்தான் இருக்கின்றன. தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் எல்லாம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஆனால் 40 தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு 6 கட்ட வாக்குப் பதிவு என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அம்மாநிலத்தில் நிலவும் மிக மோசமான சட்டம் ஒழுங்குதான் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
உ.பியிலும் 6 கட்டம்
இதேபோல் மிக மோசமான சட்டம் ஒழுங்கு கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளுக்கும் 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இத்தனைக்கும் மாவோயிஸ்டுகள் அதிக ஆதிக்கம் இல்லாத மாநிலங்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications