மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்துவிட்டார்.. பெண் மீது லோக்சபா எம்.பி பரபர புகார்
டெல்லி: லோக்சபா எம்.பி.க்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்ணை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த லோக்சபா எம்.பி. கே.சி. பட்டேல் எம்.பி. டெல்லி போலீசில் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பெண் ஒருவர் உதவி கேட்டு என்னிடம் வந்தார். காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் அளித்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து என்னை நினைவிழக்க செய்து விட்டார்.
நினைவு இழப்பு
நான் நினைவு திரும்பி எழுந்த போது இடையே என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் என்னை வைத்து ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை எடுத்துள்ளதாக அந்த பெண்ணும் அவருடன் இருந்த சில ஆண்களும் என்னிடம் கூறினர்.
ரூ.5 கோடி மிரட்டல்
மேலும், இந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். மேலும் போலீசில் பொய் புகார் அளிப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர், இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
முன்பு ஒருமுறை
இப்படி ஒரு புகார் வந்திருப்பதை டெல்லி சிறப்பு கமிஷனர் முகேஷ் மீனாவும் உறுதி செய்தார். போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். அப்பெண் கடந்த ஆண்டு இதேபோல், ஒரு எம்.பி. மீது போலீசில் பொய் புகார் அளிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகங்கள்
அதேநேரம், காசியாபாத்திலுள்ள அந்த பெண் வீட்டுக்கு உதவி செய்ய எதற்கு ஒரு எம்.பி நேரடியாக செல்ல வேண்டும், இதுகுறித்து யாாருக்கும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.