பாஜகவுக்கு தோல்வி உறுதி.. சத்தீஸ்கரில் மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கும் காங்கிரஸ் - புது சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்றும், பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றும் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
நடப்பு மாதமான நவம்பரில் மட்டும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மிசோராம் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் 25ம் தேதியும், தெலங்கானாவுக்கு வரும் 30ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இங்கு நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. லோக்போல் (LokPoll)எனும் அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது. மாறாக இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 28 முதல் 30 தொகுதிகளிலம், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதி வரையும் பெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications