தண்டவாளங்களில் விவசாயிகள் மறியல்! பயணிகளுக்கு ரூ 1.49 லட்சம் திருப்பி கொடுத்த லூதியானா ரயில் நிலையம்
பஞ்சாப்: ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 3 விவசாயிகளை விடுவிக்கக் கோரி கடந்த 5 நாட்களாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால், டிக்கெட்டை ரத்து செய்த பயணிகளுக்கு ரூ 1.49 லட்சத்தை லூதியானா ரயில்வே நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது.
இந்த ரயில் மறியல் போராட்டம் கடந்த 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்த பயணிகள், ரயில்கள் இயக்கப்படாததை அடுத்து பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டத்தால் அம்பாலா லூதியானா- அமிருதசரஸ் இடையே 73 ரயில்கள் நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டன. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 13 ஆம் தேதி முதல் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதிகளில் ஷம்பு மற்றும் கனௌரியில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த முறை போல் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க எல்லைகளில் போலீஸார் தடுப்புகளை வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் 3 விவசாயிகளை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஷம்புவில் உள்ள லூதியானா- அமிருதசரஸ் வழித்தடத்தில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை கடந்த புதன்கிழமை அதாவது 17ஆம் தேதி முதல் தொடங்கினர்.
இந்த போராட்டம் நேற்று 5 ஆவது நாளாக நீடித்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 73 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 விவசாயிகள் விடுவிக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் ரயில்கள் இயங்காத நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரத்து செய்த பயணிகளுக்கு ரூ 1.49 லட்சத்தை லூதியானா ரயில் நிலைய நிர்வாகம் திருப்பி அளித்துள்ளது.
அது போல் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்குள்பட்ட 1439 பயணிகளுக்கு ஃபெரோஸ்பூர் ரயில் நிலைய நிர்வாகம் ரூ 7.04 லட்சத்தை திருப்பி கொடுத்தது. கடந்த 4 நாட்களுக்கு 3,821 பயணிகளுக்ரூ ரூ 20.12 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டது. அமிருதரஸ், புது டெல்லி இன்டர்திட்டி ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அமிருதசரஸ், லூதியானா, பதின்டா, ஃபசில்கா, ஹிஸார் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகள் அவதியடைகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications