Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி. பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: உடல் கருகி 22 தொழிலாளர்கள் பரிதாப பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த

மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் உள்ள கேரி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை 3.30 மணியளவில் ஆலையின் வெடிமருந்து அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Madhya Pradesh: 22 charred to death in cracker's factory blast in Balaghat

இதனையடுத்து, தீ அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரைவாக பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தன. இந்த பயங்கர விபத்தில் 22 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், பலர் பலத்த படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+