மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: துருப்பு சீட்டாக இருக்கும் தலித் சமூக வாக்குகள்! பாஜக - காங். வியூகம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர். எனவே, தலித் சமூக ஓட்டுக்களை கவர பாஜகவும் காங்கிரசும் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக கூடுதல் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களையும், அனல் பறக்கும் பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளது. இதனிடையே, மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கவர பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மாயக் கவிஞர் சந்த் ரவிதாஸ்க்கு கோவில் கட்டும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தலித் மக்கள் மத்தியில், துறவி ரவிதாஸ்க்கு பெருமளவு ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால், அவர்களின் வாக்குகளை கவரும் விதமாகவும் பாஜக கோவில் கட்ட நடவடிக்கை எடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூட , தலித் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாஜக செய்து வரும் நடவடிக்கைகளை போல எந்த ஒரு கட்சியும் இதுவரை எடுத்தது இல்லை' என்று பேசினார். ஆனால், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய சில நாட்களில், குரு ரவிதாஸ் ஆஷ்ரமத்தின் தலைவர், மருத்துவமனையாக இதை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதேவேளையில் பிரதமரின் நிகழ்ச்சியில் பூஜை செய்ய கூட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சாகர் மாவட்டத்தில் துறவி ரவிதாஸ் நினைவாக மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பாக தலித் வாக்குகளை கவர பாஜக முயற்சிப்பபதாகவும் விமர்சித்தது.
இவ்வாறாக இரு கட்சிகள் இடையேயும் மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கணிசமாக பெற கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில், 82 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். இவற்றில் 47 தொகுதிகள் எஸ்.டி பிரிவினருக்கும் 35 தொகுதிகள் எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர்.
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நிலையில் புந்தேல்கண்ட், விந்தியா மற்றும் குவாலியர் - சம்பல் பகுதிகளில் தலித்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 2003, 2008 ,2013 தலித் வாக்குகள் கணிசமாக பாஜகவிற்கே வந்தது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டி சரிசமமாக இருந்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications