மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: துருப்பு சீட்டாக இருக்கும் தலித் சமூக வாக்குகள்! பாஜக - காங். வியூகம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர். எனவே, தலித் சமூக ஓட்டுக்களை கவர பாஜகவும் காங்கிரசும் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக கூடுதல் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களையும், அனல் பறக்கும் பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளது. இதனிடையே, மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கவர பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மாயக் கவிஞர் சந்த் ரவிதாஸ்க்கு கோவில் கட்டும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தலித் மக்கள் மத்தியில், துறவி ரவிதாஸ்க்கு பெருமளவு ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால், அவர்களின் வாக்குகளை கவரும் விதமாகவும் பாஜக கோவில் கட்ட நடவடிக்கை எடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூட , தலித் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாஜக செய்து வரும் நடவடிக்கைகளை போல எந்த ஒரு கட்சியும் இதுவரை எடுத்தது இல்லை' என்று பேசினார். ஆனால், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய சில நாட்களில், குரு ரவிதாஸ் ஆஷ்ரமத்தின் தலைவர், மருத்துவமனையாக இதை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதேவேளையில் பிரதமரின் நிகழ்ச்சியில் பூஜை செய்ய கூட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சாகர் மாவட்டத்தில் துறவி ரவிதாஸ் நினைவாக மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பாக தலித் வாக்குகளை கவர பாஜக முயற்சிப்பபதாகவும் விமர்சித்தது.
இவ்வாறாக இரு கட்சிகள் இடையேயும் மத்திய பிரதேசத்தில் தலித் வாக்குகளை கணிசமாக பெற கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில், 82 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். இவற்றில் 47 தொகுதிகள் எஸ்.டி பிரிவினருக்கும் 35 தொகுதிகள் எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர்.
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நிலையில் புந்தேல்கண்ட், விந்தியா மற்றும் குவாலியர் - சம்பல் பகுதிகளில் தலித்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 2003, 2008 ,2013 தலித் வாக்குகள் கணிசமாக பாஜகவிற்கே வந்தது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டி சரிசமமாக இருந்தது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications