அடுத்த அதிரடிக்கு தயார் ஆகும் பாஜக.. உடனே ஆட்சியை கலைக்க முடிவு.. ம.பியில் சூடுபிடிக்கும் களம்!
மத்திய பிரதேச அரசியல் நிலையற்றதன்மை நிலவி வரும் நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.
போபால்: மத்திய பிரதேச அரசியல் நிலையற்றதன்மை நிலவி வரும் நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.
Recommended Video
காங்கிரசில் இளம் மற்றும் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 23 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதில் 22 எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுதான் அங்கு அரசியல் மாற்றங்கள் நடக்க காரணம்.

பலம் என்ன
23 எம்எல்ஏக்கள் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தனர்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் இருந்தனர். அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது 23 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் கூட்டணி பலம் 97 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலம் 90 ஆக குறையும். மொத்த அவையின் பலம் 198 ஆக மாறும்.

பாஜக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.
போபாலில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்த 107 எம்எல்ஏக்களை பாஜக நேற்று இரவோடு இரவாக பேருந்து மூலம் வெளியேற்றியது. 5 சொகுசு பேருந்துகளில் இவர்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் ஹரியானாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஹரியானா எங்கே
ஹரியானா மாநிலம் குர்கானில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் எம்எல்ஏக்களை காங்கிரஸ் இழுக்க முயற்சிக்க கூடாது என்பதால் பாஜக இந்த செயலை செய்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வரும் மார்ச் 16ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதில் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன் கூட ஆட்சி கலைக்கப்பட வாய்ப்புள்ளது.

மீண்டும் செல்கிறார்கள்
இதற்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் தங்கள் திட்டத்திற்கு சிக்கல் எதுவும் வர கூடாது என்பதால் பாஜக தங்கள் எம்எல்ஏக்களை ஒன்றாக அழைத்து ஒரு இடத்தில் வைத்து இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் மீதம் இருக்கும் எம்எல்ஏக்களை சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications