40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை..ம.பி. பாஜக அரசு அதிரடி!
மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக தற்போது 2.5 மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அடையாள அட்டையில் மாடுகளில் புகைப்படம் இருக்காது. ஆனால் ஆதார் அட்டை போலவே 12 இலக்க அடையாள எண் இருக்கும்.
மேலும் உரிமையாளரின் பெயர், முகவரி, மாடின் விலாசம் ஆகியவை இருக்கும். இன்னும் 37.5 லட்சம் மாடுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

என்ன காரணம்
மாடுகளின் வளர்ச்சி, பால் கறக்கும் தன்மை, எத்தனை குட்டி போடுகிறது என நிறைய விஷயங்களை கண்காணிக்க இந்த அடையாள அட்டை உதவும் என்று கூறப்படுகிறது. ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அட்டையை நிர்வகிக்க தனி குழு ஒன்றை மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.

ஆண்ட்ராய்ட்
இதற்காக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. ''ஐஎன்எபிஎச்' எனப்படும் இந்த அப்ளிகேஷனில் இந்த மாடுகள் குறித்த தகவல்கள் ஏற்றப்படும். இதன் மூலம் மாடுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி, குறைபாடு கண்காணிக்கப்பட்டு, அதில் தகவல்கள் பதிவேற்றப்படும்.

ஆதார் அட்டை
ஆனால் இந்த விஷயம் இதோடு முடியவில்லை. இந்த 12 இலக்க எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரோ அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைத்து தகவல்களை அதில் ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏப்ரல் 1ல் இருந்து இந்த பணி தொடங்கும்.

பசு பாதுகாப்பு
இது பால் உற்பத்தி மட்டுமில்லாமல் பசுக்களை பாதுகாக்கவும் உதவும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி பசுவதை, பசுக்களை கடத்துதல் ஆகியவை தடுக்க முடியும். முக்கியமாக பசுக்களை திருடு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். பசுக்களை விற்க வேண்டும் என்றால் சரியான 12 இலக்க எண்ணை கூறி மட்டுமே விற்க முடியும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications