40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை..ம.பி. பாஜக அரசு அதிரடி!
மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக தற்போது 2.5 மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அடையாள அட்டையில் மாடுகளில் புகைப்படம் இருக்காது. ஆனால் ஆதார் அட்டை போலவே 12 இலக்க அடையாள எண் இருக்கும்.
மேலும் உரிமையாளரின் பெயர், முகவரி, மாடின் விலாசம் ஆகியவை இருக்கும். இன்னும் 37.5 லட்சம் மாடுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

என்ன காரணம்
மாடுகளின் வளர்ச்சி, பால் கறக்கும் தன்மை, எத்தனை குட்டி போடுகிறது என நிறைய விஷயங்களை கண்காணிக்க இந்த அடையாள அட்டை உதவும் என்று கூறப்படுகிறது. ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அட்டையை நிர்வகிக்க தனி குழு ஒன்றை மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.

ஆண்ட்ராய்ட்
இதற்காக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. ''ஐஎன்எபிஎச்' எனப்படும் இந்த அப்ளிகேஷனில் இந்த மாடுகள் குறித்த தகவல்கள் ஏற்றப்படும். இதன் மூலம் மாடுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி, குறைபாடு கண்காணிக்கப்பட்டு, அதில் தகவல்கள் பதிவேற்றப்படும்.

ஆதார் அட்டை
ஆனால் இந்த விஷயம் இதோடு முடியவில்லை. இந்த 12 இலக்க எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரோ அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைத்து தகவல்களை அதில் ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏப்ரல் 1ல் இருந்து இந்த பணி தொடங்கும்.

பசு பாதுகாப்பு
இது பால் உற்பத்தி மட்டுமில்லாமல் பசுக்களை பாதுகாக்கவும் உதவும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி பசுவதை, பசுக்களை கடத்துதல் ஆகியவை தடுக்க முடியும். முக்கியமாக பசுக்களை திருடு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். பசுக்களை விற்க வேண்டும் என்றால் சரியான 12 இலக்க எண்ணை கூறி மட்டுமே விற்க முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications