Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. சவுகான் வீட்டுக்கு சென்ற சிந்தியா.. அரை மணி நேரம் முக்கிய ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக, ஆட்சியை தக்கவைக்கும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகானை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்பட்டி பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.

Madhya pradesh election results: Shivraj Chouhan meets Jyotiraditya Scindia as BJPs move toward victory

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 3 மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.

பாஜக வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, "முழுமையான முடிவுகள் வரும் வரை நாங்கள் காத்திருப்போம். நாங்கள் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நலத்திட்டங்களும் தான் இத்தகைய வெற்றிக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போபாலில் உள்ள முதல்வர் சவுகானின் இல்லத்திற்கு வந்தார். இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் நெருங்கிய சந்திப்பு நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+