ம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. சவுகான் வீட்டுக்கு சென்ற சிந்தியா.. அரை மணி நேரம் முக்கிய ஆலோசனை!
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக, ஆட்சியை தக்கவைக்கும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகானை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்பட்டி பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 3 மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 72 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
பாஜக வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, "முழுமையான முடிவுகள் வரும் வரை நாங்கள் காத்திருப்போம். நாங்கள் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நலத்திட்டங்களும் தான் இத்தகைய வெற்றிக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போபாலில் உள்ள முதல்வர் சவுகானின் இல்லத்திற்கு வந்தார். இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் நெருங்கிய சந்திப்பு நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications