காணாமல் போன மாஸ்க்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி.. ஜெயின துறவியை வரவேற்க குவிந்த "மாஸ் ம.பி."
போபால்: மத்திய பிரதேசத்திற்கு வருகை தந்த ஜெயின மதத் துறவியை வரவேற்க சமூக விலகலை உதறி தள்ளிவிட்டு மாஸ் அளவிலான கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சமூக இடைவெளி முக்கியம் என அரசும் மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, அரசு விதிகளை மதிக்காதது போன்றவை இருந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜெயின மத துறவி
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் மாவட்டத்திற்கு வந்த ஜெயின மத துறவியை வரவேற்க பொதுமக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்டத்தில் உள்ள பாண்டா நகரத்திற்கு முனி பிரனாம் சாகர் தலைமையில் ஜெயின மத துறவிகள் குழு திங்கள்கிழமை வருகை தந்தனர்.

விசாரணை
அப்போது அவரை வரவேற்க பெருங்கூட்டம் கூடியது. மக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் திரண்டனர். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கு
இதுகுறித்து கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவீன் புரியா கூறுகையில் பாதுகாப்பு உத்தரவுகளை மீறும் செயல் இது. வீடியோக்களை ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 400 முதல் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் 4,173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் பலியாகிவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் இதுபோல் மக்கள் மாஸாக கூடுவது கொரோனா அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் நிலைமை மோசமாகும் சூழலை மறந்து இவர்கள் கூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications